Subscribe:

Saturday, September 10, 2011

கல்வியை தொடர முயன்ற மகளை கௌரவ கொலை செய்த பெற்றோர்

எதிர்காலத்தில் சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற கனவுடன் கல்வியைத் தொடர்ந்த  தனது மகளை பெற்றோர் கௌரவக் கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு புதன்கிழமை பிரித்தானிய நீதிமன்ற மொன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தாங்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு சம்மதிக்காமல் கல்வியை தொடரப் போவதாக பிடிவாதம் பிடித்த தமது மகள் ஷாபிலியாவை(17 வயது) படுகொலை செய்த குற்றச்சாட்டில் அவரது பெற்றோரான இப்திகார் அஹ்மட்டும்(51 வயது), பர்ஸானாவும் (48 வயது) செஷியரிலுள்ள ஹால்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட வேளை காணாமல் போன ஷாபிலியாவை படுகொலை செய்ததாக 8 வருடங்கள் கழித்து அவரது பெற்றோர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷாபிலியாவின் அழுகிய சடலம் 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆற்றங்கரை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
பாடசாலை விடுமுறையை கழிக்க தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு ஷாபிலியா, குடும்பத்துடன் சென்ற வேளையிலேயே அவருக்கு பலவந்த திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷாபிலியா தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்துள்ளார். தொடர்ந்து அவர் மீளவும் கல்வி கற்க பிரித்தானியாவுக்கு வந்துள் ளார். இதன் பின்பே அவர் திடீரென ஒரு நாள் காணாமல் போயுள்ளார்.
அதன் பின் அவரது அழுகிய சடலம் குப்பிரியாவிலுள்ள கென்ட் ஆற்றங்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. ஆரம்பத்தில் ஷாபிலியாவின் படுகொலைக்கான காரணத்தை விசாரணையாளர்களால் அறிய முடியாதிருந்துள்ளது.
இதனையடுத்து ஷாபிலியாவுக்கு இரு வயது இளமையான அவரது தங்கையான அலிஷா, ஷாபிலியாவின் படுகொலையில் தமது பெற்றோருக்கு தொடர்பிருப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்து ஆதாரங்களை முன் வைத்ததையடுத்து அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

0 comments:

Post a Comment